பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி!. இருவரும் உயிரைவிட்ட சோக சம்பவம்!.
பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய வீட்டிலிருந்து வெளியேறி பைக்கில் சென்ற காதல் ஜோடியினர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமாரும், அவரது கல்லூரியில் படித்து வரும் ஜெயப்பிரதா என்ற மாணவியும் காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிற்கும் இவர்களது காதல் விசயம் தெரிந்து அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமது காதலை வீட்டிலிருந்து யாரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என இருவர்களும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்றிரவு சரத்குமார், ஜெயபிரதாவை அவரது வீட்டிலிருந்து பைக்கில் அழைத்து கொண்டு சோளிங்கருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த பைக் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The couple who fell on the bike have died in an accident