செய்யாறு அரசு பள்ளியில் மாணவன் தூக்கிட்டுதற்கொலை! பள்ளி மைதானத்தில் நடந்த சோகம்!! - Seithipunal
Seithipunal


பெற்றோர்கள் திட்டியதால் செய்யாறு அரசு பள்ளியில் மாணவன் தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பெரிய விளையாட்டும் மைதானமும் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி மரங்களும் உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி மைதானத்துக்கு விளையாடச் சென்றவர்கள் அங்குள்ள மரத்தில் மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை தர்த்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விசாரணையில், செய்யாறு அருகே மாளிகைப்பட்டு கிராமத்தைச் ரஜினி என்பவரின் மகன் மதன்(17 வயது) என்பது தெரியவந்துள்ளது. இவர் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மதனுக்கு அண்மையில் அவருடைய பெற்றோர் செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த செல்போனை மதன் பெற்றோர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்துவிட்டார். இதைத்தொடர்ந்து, செல்போனை ஏன் விற்பனை செய்தாய் என்று மதனை அவருடைய பெற்றோர்கள் திட்டி உள்ளனர்.

பெற்றோர்கள் திட்டியதால் மாணவன் மதன்,மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். நேற்று பள்ளிக்கு வந்த மதன் பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்குச் செல்லாமல் பள்ளியைச் சுற்றியே வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பள்ளி விளையாட்டு மைதானத்தில் யாரும் இல்லாத இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையடுத்து மாணவன் மதனின் உடலைக் கைப்பற்றிய காவல் துறை செய்யாறு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பள்ளி மாணவன் மதன் பள்ளி விளையாட்டு மைதானத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the cheyyar govt boy school student in suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->