மாணவியை கடத்தி சென்று ஆட்டோ ஓட்டுநர் செய்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சிறுமி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 10 மாதங்களாக வாடகை ஆட்டோவில் தனது நண்பர்களுடன் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இது போல நேற்றும் தனது நண்பர்களுடன் ஆட்டோவில் கவிதா சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் தனது 4 நண்பர்களுடன் பள்ளிக்கு அருகே அந்த சிறுமியை காரில் கடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை பெங்களூருவிற்கு கடத்திச்சென்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இதனிடையே, அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் புகாரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து அந்த நபர்களை தேடி வந்தனர். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அந்த மூவரையும் போலீசார் கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மேலும் இரண்டு பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதுதவிர கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் ஏற்கனவே சிறுமியை பணத்திற்காக கடத்தி வைத்து 20 லட்சம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The car crash carried out by the auto driver


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->