காரை வாங்கியவரிடம் முறையாக ஆவணங்களைச் சேர்க்காமல்..! அதை வைத்து...!! குறுக்கு வழியில் பணத்தை ஆட்டையைப் போட்ட புரோக்கர்..!!! - Seithipunal
Seithipunal


பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கார் புரோக்கராக இருக்கிறார். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

பட்டிவீரன்பட்டியில் வசித்து வந்த தமிழரசன் என்பவர், தனது காரை விற்றுத் தரும்படி, பழனிச்சாமியிடம் சொல்லி உள்ளார். 

அதன்படி, பழனிச்சாமியும், அதே ஊரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவருக்கு, தமிழரசனின் காரை, 2.60 லட்சத்திற்கு விலை பேசி விற்று விட்டார். ஆனால், காருக்குரிய ஆவணங்களை, புரோக்கர் பழனிச்சாமி, இது வரை வாங்கித் தராமல் இருந்துள்ளார்.

அந்த ஆவணங்களை வைத்து, புரோக்கர் பழனிச்சாமி, தேனியில் உள்ள தனியார் பைனான்சியரிடம் கொடுத்து, பணம் கடனாகப் பெற்றுள்ளார்.

காரின் ஆவணங்களைப் பல முறை, இளஞ்செழியன் கேட்டும், பழனிச்சாமி தரவில்லை. இதற்கிடையே, பைனான்ஸ் பார்ட்னர்களான வைகை பாண்டியன், தேவரப்பன்பட்டியைச் சேர்ந்த சுப்புராம் ஆகியோர், தமிழரசன் காரை எடுத்துச் சென்று விட்டனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த தமிழரசன், தன்னுடைய காரின் ஆவணங்களை வைத்து, பழனிச்சாமி, தவறான முறையில் பணம் பெற்றதாகவும், அந்தக் காரை, வைகை பாண்டியனும், அவருடைய பைனான்ஸ் பார்ட்னரும் சேர்ந்து திருடி விட்டதாக, பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் புரோக்கர் பழனிச்சாமியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the car broker in robber


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->