படிப்பில் ஆர்வமுள்ள 17 வயது இளம் சிறுமியை 40 வயது நிரம்பிய நபருடன் திருமணம் செய்துவைத்த கொடுமை!. அவர்களிடமிருந்து தப்பித்த இளம் சிறுமியின் குமுறல்! - Seithipunal
Seithipunal



திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர்   தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சமடைந்துள்ளார். அந்த இளம்பெண் கூறுகையில், கடந்த 2016-ஆம் ஆண்டு என் சகோதரி, அதாவது எனது அக்காவுக்கு திருமணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமணம் ஏற்பாடு நடந்துகொண்டிருந்த கடைசி நேரத்தில் எனது அக்கா திருமணம் வேண்டாம் என்று கூறியதால், என்னை 17 வயது சிறுமி என்று கூட பாராமல் 40 வயதான எனது தாய்மாமனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து   என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டனர். அதன் பின்னர் எனக்கு துளி அளவுகூட வாழ விருப்பமில்லை, அதனால் என்னை வீட்டிர்க்குள்ளையே அடைத்து கைதிபோல் வைத்திருந்தனர்.

இரண்டு ஆண்டுகளாக தன்னை வீட்டில் அடைத்துவைத்திருந்ததால், என்னால் அங்கிருந்து தப்பித்து வர முடியவில்லை எனவும், தற்போது ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பித்து வந்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், தனக்கு திருமண வாழ்க்கையில் விருப்பமில்லை எனவும், வேலை செய்து கொண்டே படிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The brutal marriage of a young girl to a 40-year-old man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->