சொத்திற்காக தம்பியின் மனைவியை, துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடூர சம்பவம்!. - Seithipunal
Seithipunal



தம்பியின் மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசிய மைத்துனரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் அருகே மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர்என்ற நபருக்கும் எஸ்தர் என்ற பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. ஜோசப் சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி  எஸ்தர் அவரது குழந்தையுடன், திருவாரூரில் உள்ள மேலாளவந்தசேரியில் வசித்து வந்தார்.

திடீரென கடந்த 6ம் தேதி முதல் எஸ்தரை காணவில்லை, இது குறித்து அவர் குடும்பத்தார் சிங்கப்பூரில் உள்ள  ஜோசபுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் சொந்த ஊருக்கு வந்த ஜோசப், தேவங்குடி போலீஸ் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். பொலிசார் ஜோசப்பின் உறவினர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அவரின் அண்ணன் நெல்சனிடம் எஸ்தர் குறித்து விசாரித்து போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் பொலிசாருக்கு நெல்சன் மீது சந்தேகம் வந்தது.

இதையடுத்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக எஸ்தரை கொலை செய்ததாக நெல்சன் ஒப்புக்கொண்டார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் எஸ்தரை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி மேலாளவந்தசேரி அருகில் உள்ள ஆற்றங்கரை புதரில் வீசியதாக கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து அங்கு சென்ற பொலிசார் இரண்டு சாக்கு மூட்டையில் கிடந்த எஸ்தரின் உடலை துண்டு பாகங்களாக கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினார்கள். பிறகு நெல்சனை கைது செய்தனர். எஸ்தரின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The bride's wife was brutally murdered for property


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->