என்னோட இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மூக்கு பொடி சித்தர் சாமிதான்.! கண்கலங்கிய பிரபல நடிகர்.! யார் இந்த மூக்கு பொடி சித்தர்?
என்னோட இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மூக்கு பொடி சித்தர் சாமிதான்.! கண்கலங்கிய பிரபல நடிகர்.! யார் இந்த மூக்கு பொடி சித்தர்?
அன்று முதல் இன்றளவு வரை பல சித்தர்கள் வலம் வரும் புனிதமான இடமாக கருதப்படுவது திருவண்ணாமலை, இங்கு புகழ்பெற்ற பிரபல சித்தர்கள் பலர் வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இங்கு வாழ்ந்து வந்த சித்தர்களுள் மிகவும் பெருமை வாய்ந்ந்தவர் மூக்கு பொடி சித்தர். இவரது ஆசி கிடைத்தால் போதும், வாழ்க்கை அப்படியே மாறிவிடும் என்று பலரும் நம்புகின்றனர். மேலும் பல்வேறு திரைபிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் இவரை பார்த்து ஆசி பெற்று செல்வதும் உண்டு.
மேலும் அமமுக தலைவரான தினகரன் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், மூக்கு பொடி சித்தரிடம் வந்து ஆசி பெற்ற பின்பு தான் அதை நடைமுறை படுத்துவாராம். மேலும் தினகரனின் வாழ்வில் இவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட சித்தரின் ஆசிர்வாதம்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சித்தர் கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்ரி ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது இறப்பு பக்தர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தன் நண்பர்களுடன் வந்த பிரபல நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திருவண்ணாமலைக்கு வந்த போது ஒரு முறை மூக்கு பொடி சித்தரை சந்திக்க நேர்ந்தது.அவரிடம் ஆசி பெற்று சென்றேன். அதன் பிறகு தான் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தேன். இதைத் தொடர்ந்து ஒரு படத்தில் கதாநாயகனாகவும், 2 படத்தில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறேன்.
மூக்கு பொடி சித்தர் ஜீவசமாதி அடைந்த நாளில் என்னால் அவரை பார்க்க வர முடியவில்லை. அதனால் தற்போது சமாதியை வழி பட வந்ததாக கூறியுள்ளார்.
English Summary
thadi balaji talk about mookupodi siddhar