மது குடித்தால் மட்டும் அல்ல..! விற்றல் கூட மரணம் தான்..!!
மது குடித்தால் மட்டும் அல்ல..! விற்றல் கூட மரணம் தான்..!!
பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர் தீடீர் மரணம்…அதிகாரிகளின் டார்ச்சர் காரணமா…?
திண்டுக்கல் அருகே உள்ள பழைய கன்னிவாடி கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 43). இவர் மதுரை சாலையில் உள்ள செட்டியபட்டி பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையில், பணியாற்றி வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த டாஸ்மாக் கடையில், விற்பனையாளராகப் பணி புரிந்து வருகிறார். ஏற்கனவே, மது விற்பனையை அதிகரிக்க வேண்டும், என்று டாஸ்மாக் அதிகாரிகள், அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மாலையில், கடையில், சரக்கு விற்ற பணத்தை அவர் எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, திருமுருகன் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த, மற்ற ஊழியர்கள், அவரை உடனடியாக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து விட்டாலும், அதற்கு, அதிகாரிகளின் டார்ச்சர் தான் காரணம் என்று, சக ஊழியர்கள் கூறி வருகின்றனர்.
திருமுருகனுக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மது குடித்தால் மட்டும் அல்ல..! விற்றல் கூட மரணம் தான்..!!
English Summary
tasmac staff killed in work tension