'தண்ணி' அடிக்க தண்ணீர் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்..!!
'தண்ணி' அடிக்க தண்ணீர் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்..!!
மது அருந்துவதற்கு தண்ணீர், டம்ளர் கேட்ட வாலிபரை உருட்டு கட்டையால் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள உளியம்பாக்கம் காலனியை சேர்ந்த கூலி வேலைக்கு செல்லுபவர் ராஜ்குமார்.இவரின் வயது 20 தான். இந்த வயதில் மதுவுக்கு அடிமையாகியுள்ளார்.தினமும் இரவில் மது அருந்தும் பழக்கம் இருந்தது.
உளியம்பாக்கம் பக்கத்தில் உள்ள கீழாந்தூர் ஊரில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது வாங்கிக் வந்தார். ஏற்கனவே அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்த நிலையில், வாங்கி வந்த மதுவை குடிப்பதற்கு அருகில் உள்ள ஜெயலலிதா என்பவரின் வீட்டிற்கு சென்று டம்ளர், தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அந்த வாலிபர் மது போதையில் இருந்ததை பார்த்த அவர்கள் தண்ணீர்,டம்ளர் தர மறுத்ததால்,அவர்களுடன் சண்டையிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதாவும் அவரது மகன் சுதாகர் உருட்டைகட்டையை எடுத்து ராஜ்குமாரை அடித்தே துரத்தினர். இதில் மயக்கம் அடைந்து கீழு விழுந்த அந்த நபரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அந்த வாலிபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் அவரது மகனை கைது செய்து அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
English Summary
tasmac problem one man killed