பொங்கியெழுந்த மக்கள்..காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.!!
பொங்கியெழுந்த மக்கள்..காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் .!!
இலங்கை படையினர் இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் உள்ளிட்ட 4 நன்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை,நாகை,ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை கைது செய்வதும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் வடிக்கையாகியுள்ளது.இதனால் மீனவர்கள் அவசர கூட்டம் நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றுள்ளது. அதில் கைதான 27 மீனவர்களை விடுதலை செய்தல், மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 184 படகுகளை விடுவித்தல், குந்துகாலில் மீன்பிடி இறங்குதளம் அமைத்தல்,இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கான சந்திப்பினை ஏற்பாடு செய்தல் போன்ற 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வரும் 31 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
English Summary
tamilnadu people announce strike