4 ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டநிலையில் தமிழக அமைச்சர், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்!!
Tamilnadu Minister Vijayabaskar
4 ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி ஆணையத்தில் தற்போது நேரில் ஆஜராகி உள்ளார்.
ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக விசாரிக்க, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர், உயர் காவல் அதிகாரிகள், அப்போலோ மருத்துவர்கள் உட்பட பலரிடமும் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்.
ஏற்கனவே சம்மன் அனுப்பபட்ட நிலையில் முதல்முறையாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
English Summary
Tamilnadu Minister Vijayabaskar