நான் மட்டும் அதை செய்து இருந்தால், சசிகலா என்ன சும்மா விட்டு இருக்குமா? முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட பகீர் தகவல்!!
Tamilnadu Cm KPalanisamy Talk Now
சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
* மக்களுக்கு கொடுத்து கொடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர் என புகழாரம் சூட்டினார். காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.
* தமிழகத்தில் 51 லட்சம் குழந்தைகள் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். பல தலைவர்களின் பிறந்தநாளை பார்த்துள்ளோம், சிலர் உண்டியல் வைப்பார்கள், சிலர் எடைக்கு எடை பணம் கேட்பார்கள், இவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
* ஜெயலலிதா மறைந்த பிறகு கோடநாடு தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது; கோடநாடு சம்பவம் கூலிப்படையினர் செய்தனர். கோடநாட்டில் ஆதாரம் இருந்தால் சசி குடும்பத்தினர், எங்களை சும்மா விடுவார்களா!
* இரண்டாக பிரிந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட ஒன்று சேரவில்லை. எம்ஜிஆர் மறைவின் போது உடைந்த இயக்கத்தை ஒன்றாக சேர்த்தவர் ஜெயலலிதா தான்.
* சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமதித்த நிகழ்வு திமுக ஆட்சியில் தான் நடந்தது. பல சோதனைகளை கடந்து தான் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார்.
மேலும், எதற்கும் அஞ்சமாட்டேன், கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவில் இருப்பேன் என முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார்.
English Summary
Tamilnadu Cm KPalanisamy Talk Now