இந்தியாவை வல்லரசாக்க இவரால் தான் முடியும்!! வெளியான புதிய தகவல்!!
tamilisai soundhararajan says about bjp
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி சாலை பாரதிநகரில் இன்று பாஜக கொடியேற்று விழா நடந்தது. அதில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கொடியேற்றிவைத்தார்.
பின்னர் அந்த நிகழ்வில் அவர், " இந்தியா பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியால் உலகிலேயே மிக வலிமை மிக்க நாடாக மாறியுள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால், சாமானிய, ஏழை மக்களுக்கும் சொந்த வீடு கனவு கனவாக மட்டும் இல்லாமல் நிறைவேறியுள்ளது. இது, பாஜக செய்த சாதனைகளில் முக்கிய சாதனையாகும்.
தமிழகத்தில் பெண்களுக்கு 1 கோடியே 90 லட்சம் பேருக்கு முத்ரா வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு இலவசமாக கேஸ் வழங்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து மத்திய அரசின் கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் பெண்களுக்காக பள்ளிகளிலும், நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், படிக்க செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூடியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், வேலைக்கு செல்லும் பெண்களும் மனநிறைவு கொண்டுள்ளனர்.
இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க பிரதமர் நரேந்திர மோடியால் மட்டும் தான் முடியும். எனவே, தமிழக மக்கள் அனைவரும் பாஜக அதிமுக பாமக கூட்டணியை வெற்றிபெறச் செய்வது அவசியமாகும்.
English Summary
tamilisai soundhararajan says about bjp