கட்சி பாகுபாடின்றி குவியும் வாழ்த்து!! சந்தோஷத்தில் திக்குமுக்காடிய தமிழிசை!!
Tamilisai soundararajan got wishes from politicians
தமிழகத்தில் வரும் 18 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிமுக , திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகின்றது. இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தமிழக தலைவரான தமிழிசை அவர்களுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் 25 ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் தமிழிசை. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தும் வாழ்த்து தெரிவித்தும் வருகின்ற்னர்.
தமிழக பாஜக நிர்வாகிகளும்,தொண்டர்களும் மட்டும் தமிழக பாஜக மாநில இளைஞரணியினர், தமிழக விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன்,
மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற்னர்.
English Summary
Tamilisai soundararajan got wishes from politicians