முக்காடு போட்டுகொண்டு கோவில் செல்கிறவர்களுக்கு பெயர் தான் பகுத்தறிவாளர்கள்!! சீண்டிய அரசியல்வாதி!!
Tamilisai says about dravidam
செய்தியாளர்களிடம் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்," பாஜக அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்கி வருகிறது. இதற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இடைத்தரகர்கள் இல்லை.
அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக மத்திய அரசு செலுத்துகிறது. லஞ்சம், ஊழல் போன்றவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றது. அதுபோல மோடி ஆட்சியில் ஒரு ஊழலை கூற முடியுமா?
வைகோ இருந்த கூட்டணி இது வரையிலும் வெற்றி பெற்றது கிடையாது. எனவேதான் தி.மு.க. கூட்டணியில் இருந்து அவரை விரட்டி விடுவதற்காக, அந்த கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி வழங்கப்பட்டது. மேலும், முக ஸ்டாலினுக்கு இன்னும் அரசியலே பிடிபடவில்லை.
இருந்தாலும், அந்த ஒரு தொகுதியையும் பெற்றுக்கொண்டு விட்டு, கூட்டணியில் போட்டியிட ம.தி.மு.க. தயாராகி விட்டது. திமுகவினர் பகுத்தறிவுவாதிகள் என கூறிக்கொண்டு முக்காடு போட்டு கோவிலுக்கு வருகின்றனர். ஆனால் நாம் தலைநிமிர்ந்து கோவிலுக்கு சென்று வருகிறோம்.
இந்த தென் திருப்பேரை கரிசல் மண் அல்ல. இது காவி மண். நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம். மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்" என அவர் கூறியுள்ளார்.
English Summary
Tamilisai says about dravidam