'தேர்தலுக்குப்பின்னர் கை காட்டமுடியாது' கலாய்த்து தள்ளிய தமிழிசை!!
Tamilisai Says About Dmk Congress Alliance
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சிறிது காலமே இருக்கையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு விதமான தேர்தல் விவாதங்கள் மற்றும் கூட்டணி குறித்த முடிவுகள் என பல்வேறு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
திமுக-காங்கிரஸ் கூட்டணி வெளிப்படையாக தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளது. ராகுல்தான் பிரதமர் என ஸ்டாலின் முன் மொழிந்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அவர்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை.
காங்கிரஸ் காட்சி முடிவை தெரிவிப்பதற்கு தாமதப்படுத்துகின்றது. அதேபோல் பாஜக தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்காமலேயே இருக்கின்றனர்.
இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை அண்மையில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நான் கை காட்டுபவர்தான் பிரதமர் ஆவார்...எனக்கூறும் ஸ்டாலின் அவர்களே!!
தேர்தலுக்கு முன்னர் நீங்கள் கை காட்டிய ராகுலையே யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையே? தேர்தலுக்குப்பின்னர் கை காட்டமுடியாது. ஏனென்றால் உங்கள் கூட்டணி வெற்றிபெறப்போவதில்லை" என கூறியுள்ளார்.
English Summary
Tamilisai Says About Dmk Congress Alliance