#சற்றுமுன்: 'தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும்' தமிழிசை!! பரப்புரையில் எடப்பாடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு!!
Tamilisai says about Bjp
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி, மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்ற்னர்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜனை ஆதரித்து, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் உரையாற்ற இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழிசையை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, " வலிமையான தலைவர் மற்றும் நிலையான ஆட்சி தரக் கூடியவர் மோடி. நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் தகுதியான தலைவர் நாட்டை ஆள வேண்டும், அதற்கு மோடி தான் தகுதியானவர்.
40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். சில துரோகிகளின் சதியால் சட்ட மன்ற இடைத் தேர்தலை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது" என பேசியுள்ளார்.
மேலும், மேடையில் பேசுகையில் " தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும்" என பாஜகவின் தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.