தயவு செஞ்சு எனைய பேச விடு தம்பி... நீட் குறித்த அதிரடியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தமிழிசைக்கு நேர்ந்த மரண பங்கம்..!
நீட் தேர்வு மையம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு கட்டத்தில் கோபமாக பேசினார்.
நீட் தேர்வு மையம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு கட்டத்தில் கோபமாக பேசினார்.
மருத்துவ சேர்க்கை நீட் தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு. இந்த தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் நாளை 2-ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.
இந்த தேர்வே வேண்டாம் என்று மாணவர்கள் கோரி வந்த நிலை மாதிரி, தமிழகத்திலாவது தேர்வு மையங்களை அமையுங்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பெரும்பாலான மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
இதனை பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்து வரும் நிலையில், இது குறித்த கேள்வி தமிழிசையுடன் எழுப்பப்பட்டது.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மழுப்பலான பதில் ஒன்றையே கொடுத்துக்கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் நீங்க இப்படியே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் மைக்க எடுத்துட்டு போயிடுங்க என பத்திரிக்கையாளர்களை பார்த்து கூறினார் தமிழிசை. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
English Summary
tamilisai-press-meet-about-neet-exam