கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தூத்துக்குடியில் மாஸ் காட்டும் தமிழிசை!! குவியும் பாராட்டுக்கள்!!
Tamilisai got supports in thuthukudi batch
தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், அரசு வழக்கறிஞர் ராஜாராம், அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் சங்கர், சண்முகராஜ், மீனாட்சிசுந்தரம், கருப்பசாமி, அந்தோணி, வட்ட பிரதிநிதிகள் ஐயப்பன் ,சுப்புராஜ், ஸ்ரீவை முத்துக்குமார், மாணவர் அணி சாம் கௌதம், மகளிர் அணி மேரி, மற்றும் தொண்டர்கள் முன்னிலையில்
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் அமைப்புச் செயலாளர் செல்லப்பாண்டியனை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தினார்
தமிழிசை பொன்னாடை போர்த்தியதை வரவேற்கும் விதமாக செல்லப்பாண்டியன் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பொன்னாடை போர்த்தி, அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு பகுதி செயலாளர் முருகன், கிழக்கு பகுதிசெயலாளர் சேவியர், பிடிஆர் ராஜகோபால், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் குருதாய், வட்டச் செயலாளர் பெருமாள், ஜெய்கணேஷ், சீனிவாசன், முருகேசன், அன்பு லிங்கம் ஆகியோரும்,
மேற்கு பகுதி கழக துணை செயலாளர் கணேசன், மேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், சந்தானம் பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சந்திரா, பொன்ராஜ் சந்திரா, செல்லப்பா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜக தலைவர்களும் தமிழிசைக்கு ஆதரவாக தூத்துக்குடியில் களம் இறங்கியுள்ளனர். இப்பெண்கள் எதிர் எதிராக மோதும் தொகுதி என்பதால் சற்று பரபரப்போடு காணப்படுகிறது தூத்துக்குடி தொகுதி.
English Summary
Tamilisai got supports in thuthukudi batch