சுதந்திரத்துக்காக வித்திட்ட வேலூரில் சுதந்திரமாய் குடித்து கும்மாளம் போட்ட தமிழச்சிகள்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசும், தமிழக திரைப்படங்களும் மது குடிப்பதை குற்றம் இல்லை என பிரச்சாரம் செய்து வந்ததின் விளைவு, இன்று குடும்பத்தை சுமக்க வேண்டிய ஆண் மகன் குடித்துவிட்டு தாயய் கொள்கிறான். கருவை சுமக்க வேண்டிய பெண் வயிற்றில் மதுவை சுமக்கிறாள். 

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக நம் தமிழக பெண்கள் மது குடிப்பது போன்ற விடியோக்கள் பரவி வருகிறது. அதில் தற்போது, அது போல் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அந்த வீடியோவில், இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டைவெளி பூங்கா அகழியை ஒட்டி அமைந்துள்ள கோட்டை மதில் மீது 3 பெண்கள் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக நடனமாடுகின்றனர். அவர்களில் ஜீன்ஸ் பேன்ட்டும், வெள்ளை கலர் டி சர்ட்டும் அணிந்த ஒரு பெண்ணின் கையில் பீர் பாட்டில் இருக்கிறது. அவர் ஓ... என சத்தமிட்டு பீர் பாட்டில் மூடியை தனது பற்களால் கடித்து திறந்து பீரை குடிக்கிறார். 

அந்த பெண்கள் போதையில் தள்ளாடி நடனமாடுவதை, கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், இவர்களை பார்த்து முகம்சுழித்தபடி திட்டிவிட்டு செல்கின்றனர். தமிழக அரசின் மதுக்கடையால் நாளைய இளைய தலைமுறையின் எதிர்காலம் போதையில் தான் இருக்கும் போல.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil college girls drinking at vellore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->