உங்களை சும்மா விடமாட்டேன் என்று, எம்.எல்.ஏ அலுவலகம் முன் தீக்குளித்த துப்புரவு தொழிலாளி., - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலைபார்த்து வருபவர் ஆனந்தன் (52).

இவர் கடந்த இரண்டு மாதங்களாகச் சரியாக வேலைக்கு  வருவதில்லை அப்படி வேலைக்கு வருவதில்லை எனவும்,வேலைக்கு வந்தாலும்  குடித்துவிட்டு போதையில் படுத்துவிடுகிறார் எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

                                               

அதுமட்டுமில்லாமல் அவருடன் வேலை செய்யும் ஆட்களிடம் சண்டை போடுகிறார். என்ற குற்றச்சாட்டு அவர் மீதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால்  நகராட்சி கமிஷனர் வெங்கடாசலம், கடந்த மாதம் அவரை சஸ்பெண்ட் செய்தார். 

ஆனால் ஒரு மாதம் ஆகியும் வேலைக்கு திரும்ப அழைக்காததால்  மனமுடைந்த அவர், 'எப்படி நீங்கள் என்னை சஸ்பெண்ட் செய்யலாம். நான் உங்களைச் சும்மா விடமாட்டேன்.என்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்' என்று கூறி  நேற்று மதியம், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., அலுவலகம் முன், தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். 

    

இதனால் படுகாயமடைந்த அவர், வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது . மேலும் ராணிப்பேட்டை போலீசார் இதனை விசாரணை செய்கின்றனர் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I will not let you down, sweeper burst himself front of MLA office


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->