தூக்கில் தொங்கிய ஆண் பிணம்!! கொலையா?! தற்கொலையா?! ஆற்காடு அருகே பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


ஆற்காடு அருகே பாலி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் விவசாய நிலத்தில் இருந்த தேக்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆண் பிணம்  இருந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் அருகில் உள்ள கலவை காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார்கள் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையின் போது அவர் செய்யாறு அடுத்து உள்ள மோரணம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சக்கரதாரி(60) என தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பதை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suicide in velur district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->