திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலர்களின் வாழ்வில் விளையாடிய விதி….! காதலன் இறந்த நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பெண் போலீஸ்…!
suicide attempt by a lady police
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோயிலில், பாதுகாப்பு காவலர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஜெயதேவ் (வயது 30), செண்பகம் (வயது 27) ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. கோயில் பாதுகாப்பு பணிகள் முடிந்ததும், இவர்கள் தங்களது ஊர்களுக்கு சென்றனர். ஆனாலும், காதல் தொடர்ந்தது.
இருவரும், வெவ்வேறு சமூகமாக இருந்தாலும், இவர்களது பெற்றோர், இவர்களின் காதலை ஏற்றுக் கொண்டு, இவர்களுக்கு, திருமணத்தையும் நிச்சயம் செய்தனர். அடுத்த மாதம் இவர்களுக்கு, திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக, ஜெயதேவ், விஷம் அருந்தி, தற்கொலைக்கு முயன்றார். அவரை, திருச்சி அரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். அவருக்கு அருகில் இருந்து பணி விடைகள் செய்து கொண்டிருந்தார், செண்பகம். அப்போது ஜெயதேவிற்கு திடீர் என்று வலிப்பு ஏற்பட்டது.
இனி, தன் காதலர் பிழைக்க மாட்டார், என்று கருதி, மனம் நொந்து போன செண்பகம், தங்கள் காதல் மலர்ந்த ராமேஸ்வரம் கோயில் முன்பாக, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
தற்போது செண்பகத்திற்கு, திருச்சியில், தனியார் மருத்துவமனையில் செண்பகத்திற்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி, ஜெயதேவ் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தி தெரியாமல், மயக்கத்திலேயே இருக்கிற செண்பத்திற்கு, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
suicide attempt by a lady police