திடீரென தலைகீழாக கவிழ்ந்த பேருந்து!. 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்!. பதறவைத்த விபத்து!. - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனியார் பேருந்து ஒன்று தலைகீழாக கவிழ்ந்து  50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி வந்த ராஜமாணிக்கம் என்ற தனியார் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. 

அந்த பேருந்து   50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆலங்குடி, அரசடிபட்டி வழியாக மணிப்பள்ளம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் திரும்பியபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

அங்கு நடந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட   50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் வெளியே வரமுடியாமல் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அலறல் சத்தம் போட்டனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மூன்று ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் நடந்த கோரவிபத்து மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suddenly accident 50 passengers injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->