மாணவனை மசாஜ் செய்யச் சொன்ன ஆசிரியர்.! தன்னை மிரட்டுவதாக மாணவர் கலெக்டரிடம் புகார்.!!
மாணவனை மசாஜ் செய்யச் சொன்ன ஆசிரியர்.! தன்னை மிரட்டுவதாக மாணவர் கலெக்டரிடம் புகார்.!!
கடந்த வாரம், ஒரு ஆசிரியருக்கு பள்ளி மாணவர் மசாஜ் செய்து விடும் வீடியோ காட்சி வைரலாக, வாட்ஸ் அப்பில் பரவியது. அதனைக் கண்டு பிடிக்க, முதன்மைக் கல்வி அலுவலர் சம்பத்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டையைச் சேர்ந்த ஆசிரியர் இளங்கோவிற்கு, 8-ஆம் வகுப்பு மாணவர் மசாஜ் செய்தது தெரிய வந்தது.
பழனி மாவட்ட கல்வி அதிகாரி, நடந்ததை மாணவரிடம் எழுத்துப் பூர்வமாக வாங்கிக் கொண்டு, ஆசிரியர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.
நேற்று, 8-வது படிக்கும் அந்த மாணவன், தன் தந்தையுடன் வந்து, திண்டுக்கல் கலெக்டரிடம், அந்த ஆசிரியர் தன்னை மிரட்டுவதாகவும், மசாஜ் செய்ததை நாடக ஒத்திகை என்றும் சொல்லச் சொல்லி வற்புறுத்துவதாகவம் புகார் அளித்தார்.
அந்த மாணவர் மேலும் கூறுகையில், “20 நாட்களுக்கு முன்பாக, ஒரு நாள் ஓய்வறையில் இருந்த, இளங்கோ ஆசிரியர், தன்னை மிரட்டி மசாஜ் செய்யச் சொன்னார் என்றும், அதனால் பயந்து போய் மசாஜ் செய்ததாகவும், ஆனால், இந்த சம்பவம் வீடியோவாகப் பரவி வருவதால், பள்ளியில் தன்னை எல்லோரும் கேலி செய்வதாகவும், அதனால் கடுமையான மன உளைச்சலில், பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் கூறினார்.
கலெக்டர், இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
விரைவில், இந்தப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப் படுவார் என்று கூறப்படுகிறது.
English Summary
student complaint to collector for his teacher