கிணற்றில் கிடந்த கோபுர கலசங்கள்….! சிலை கடத்தல் கும்பின் கை வரிசையா..? அதிர்ச்சியான சம்பவம்…! - Seithipunal
Seithipunal


 

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டைக்கு அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி நான்கு வழிச் சாலையில், கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது.

இந்தத் தோட்டத்துக் கிணற்றில் உள்ள மோட்டார் பழுதாகி விட்டதால், இந்தத் தோட்டத்தைக் குத்தகைக்கு, எடுத்துள்ள அருணாசலம், மோட்டாரைப் பார்ப்பதற்காக, கிணற்றில் இறங்கினார்.

அப்போது, கிணற்றில், ஒரு சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருணாசலம், உடனடியாக, இது குறித்து போலீசுக்கு தகவல் தந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த டி.எஸ்.பி. வெங்கடேசன், மற்றும் அருப்புக்கோட்டை டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உட்பட, காவல் துறையினர், இந்த சாக்கைப் பிரித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்குள், 4 கோபுர கலசங்கள் இருந்தது. 3 அடி உயரமுள்ள, தங்க முலாம் பூசப்பட்ட ஒரு கலசம், 1 அடி உயரத்தில் 3 கலசம், என மொத்தம் 4 கலசங்கள் இருந்தன.

இந்தக் கலசங்களை யார் கிணற்றில் வீசியது? எங்கிருந்து இந்தக் கலசங்கள் கொண்டு வரப்பட்டன? சிலை கடத்தல் கும்பலா?, வேறு யார்? என்று தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

strange in a agricultural well


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->