மீண்டும் பரபரப்பு!! தூத்துக்குடியில் ரஜினியை பார்த்து யார்? என்று கேட்ட இளைஞர் கைது! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த வருடம் மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கப்பட்டது.

இதனிடையே, போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சைபெற்று வந்தவர்களை பார்ப்பதற்காக, நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்றார். அப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பண்டாரம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ்ராஜ், நடிகர் ரஜினியை பார்த்து நீங்கள் யார்? என கேள்வி எழுப்பினார்.  இந்த சம்பவம் அந்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

                              

இந்நிலையில், நடிகர் ரஜினியை பார்த்து நீங்கள் யார் என கேள்வி கேட்ட   சந்தோஷ்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது,  ஸ்டெர்லைட்டுக்கு எதிரான துண்டறிக்கையை ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கல்லூரியில் கொடுத்ததாக, கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து பண்டாரம்பட்டி மக்கள், கோயில் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sterlite Thoothukudi Who is Rajini Ask one People


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->