சற்றுமுன் வெளியான அதிரடி தீர்ப்பு..! மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..!! தமிழக அரசுக்கு நோட்டிஸ்..!!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு அரசனை பிறப்பித்து மூடியது.  இந்நிலையில், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் மனுதாக்கல் செய்ப்பட்டுள்ளது பெர்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட அமைதியாக பொதுமக்கள் பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, கடந்த 03 ந்தேதி தமிழக அரசு போட்ட அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ''சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தையும் ஆலை நிர்வாகம் முறையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தி பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வந்ததாகவும் ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாகவும். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும்'' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜவாத் ரஹீம், ரகுவேந்திர எஸ்.ரத்தோர் மற்றும் சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு மீதான விசாரணை சற்றுமுன் (இன்று 05.07.2018) நடந்தது. விசாரணையின் முடிவில், ''ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அமிலங்களை அகற்ற அனுமதிக்க முடியாது என்றும், ஆலையை திறக்க உத்தரவிட முடியாது எனவும், வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பதிலளிக்க கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியும்''. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ''ஸ்டெர்லைட் சம்மந்தமான வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வேளையில், இதனை திசை திருப்பவே, வேதாந்த நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக'', குற்றச்சாட்டு வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sterlite issue new judgement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->