ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா தொடர்ந்த வழக்கு..!!
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜூலை 30க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தார்.
தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்குமாறு வேதாந்த நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் கோரி இருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா தொடர்ந்த வழக்கு ஜூலை 30க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Sterlite Again Open Vethanda niruvanam Manu thaakal