#BREAKING_NEWS போர்களமானது தூத்துக்குடி..! துப்பாக்கி சூட்டில்..!! ஒருவர் பலி?!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தடையை மீறி செல்ல முயன்ற பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். இதையடுத்து அவர்கள் பதிலுக்கு போட்றது மக்களும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.

பொதுமக்கள் கடுமையான தாக்குதல் நடத்தவே போலீசார் விழுந்து அடித்து ஓடினர்.. ஒரு கட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர். ஆனாலும், அதை எதிர்த்து மக்கள் முன்னேறினர். வஜ்ரா வாகனத்தை விரட்டியடித்தபடியே பொதுமக்கள் முன்னேறினர்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை பகுதியில், 3 இருசக்கர வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல ஆனது.

தற்போது கிடைத்த தகவலின் படி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவருக்கு நெஞ்சில் குண்டு பாய்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிகிறது.. மேலும் இருவருக்கு குண்டடி பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

STERLAIT PROTEST ONE PERSON GUN SHOOT ATTACK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->