ஸ்டாலினை பங்கப்படுத்திய வீடியோ..! கலக்கத்தில் கட்சி தொண்டர்கள் - வைரலாக பரவி வரும் காட்சி..! - Seithipunal
Seithipunal


ஸ்டாலின் திமுகவின் தலைவராகப் பதவியேற்றதில் இருந்து கலைஞரைப் போல ஓயாமல் பொதுக்கூட்டங்கள், மக்கள் பணிகள் என தமிழகமெங்கும் பம்பரமாய் சுற்றி வருகிறார்.

அதேப் போல மக்களும் ஸ்டாலினை அனைத்து விஷயங்களிலும் அவரது தந்தை கலைஞரோடு ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.

முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மேடைப் பேச்சிலும் பத்திரிக்கையாலர்களின் கேள்விகளுக்கு சாதூர்யமாகப் பதில் சொல்வதிலும் உலகப் புகழ் பெற்றவர்.

ஆனால் ஸ்டாலினோ மேடைகளில் பேசும்போது கலைஞரை போல மடைதிறந்த வெள்ளம் போல பேசாமல் நிறுத்தி நிதானமாகப் பேசக்கூடியவர்.

மேலும் கலைஞர் எந்த விதமானக் காகிதங்கள் மற்றும் குறிப்புகள் இன்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசக்கூடியவர். ஆனால் ஸ்டாலின் தனது கைகளில் குறிப்புகள் அடங்கிய துண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஒரே வசனத்தை திரும்ப திரும்பப் பேசுவது (நான் ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசவில்லை), தவறாகப் பழமொழிகளைக் கூறுவது ( யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே) போன்ற தவறுகளையும் அடிக்கடி செய்து வருகிறார்.

ஸ்டாலினின் இந்த துண்டு சீட் மற்றும் பிழைகளின் கூடியப் பேச்சு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

இது சம்மந்தமாக இணையதள வாசிகளும் திமுகவின் எதிரணிகளை சேர்ந்தவர்களும் துண்டு சீட்டு ஸ்டாலின் எனக் கேலி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஸ்டாலின் ஒரு பழமொழியை சொல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin viral video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->