எத்தனை கூட்டணி வந்தாலும் திமுக வெற்றி பெரும்!! ஸ்டாலின் உறுதி!!
stalin speech in poonamalle
இன்று பூந்தமல்லி அருகே, ஜமீன் கொரட்டூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று அங்கு, " பாஜகவுடன் அதிமுக சேர காரணம் அதிமுகவினர் மீது உள்ள ஊழல் வழக்குக்கள் தான்.
அதிமுக கூட்டணியில் எந்த கட்சி கூட்டணியில் இருந்தாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. எத்தனை கூட்டணி வந்தாலும் திமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.
திமுக தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததும் கலைஞர் தான். திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்துவோம்." என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஸ்டாலின் பல்வேறு விதமாக பாமகவையும் தாக்கி பேசியுள்ளார். நேற்று பாமக அதிமுகவின் கூட்டணி உறுதி செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வரம்புமீறிய வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார்.
இந்த வார்த்தைகள் பாமக அவருடன் கூட்டணி அமைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் தான் வருகிறது என பலர் விமர்சித்து வருகின்றனர். மேலும், நேற்று வரை பாமகவுக்கு திமுகவில் சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது என திமுக நிர்வாகிகளே நேற்று நடந்த விவாத நிகழ்வில் ஒப்பு கொண்டிருந்தனர்.
இது, உண்மையில் பாமக திமுகவுடன் கூட்டணிக்கு வரவில்லை என்பதனால் தன் ஸ்டாலில் இப்படி தரக்குறைவான வார்த்தை பயன்படுத்தி பாமகவை விமர்சிக்க காரணமோ என நினைக்கும் வகையில் அமைந்துள்ளது.
English Summary
stalin speech in poonamalle