மக்களை வெயிலில் அமர்த்தி வாட்டும் ஸ்டாலின்!! அதிகார தொனியில் கிராம சபை கூட்டம்?!  - Seithipunal
Seithipunal


முன்னதாக திருவாருர் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அக்கூட்டதில் ஸ்டாலின் மேடையை போன்ற உயரத்தில் அமைக்கப்பட்ட  தின்னையில் அமர்ந்திருக்க, கிராம மக்கள் அனைவரும் அவருக்கு கீழே தரையில் அமர்ந்தவாறு அவர் பேசுவதை கேட்டு அமர்ந்து இருந்தனர்.

இந்த கிராம சபை கூட்டத்தினை புகைப்படம் பிடித்து, இணையத்தில் வெளிவந்த நிலையில் பல்வேறு இளைஞர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை கலாய்த்து வந்தனர். 

சிலர், " கிராம சபை கூட்டம் என்பது கிராம மக்களுடன் அமர்ந்து சரிக்கு சமமாய் நடத்தப்பட வேண்டும், இவ்வாறு, பஞ்சாயத்திற்கு தீர்ப்பு வழங்குபவரை போல மேடையில் அமர்ந்து கொண்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வந்திருப்பதாய் கூறுவது நம்பும் படியாய் இல்லை என்றும், 

மேலும், மரத்தடியில் நிகழ்த்தப்படும் இத்தகைய கிராம சபா கூட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் அமர்ந்திருக்கும் இடங்கள் நிழல் படும் இடமாகவும், பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடம் வெயில் தாக்கும் இடங்களாகவும், அமைந்துள்ளது வருந்தத்தக்கது என்றும்,

மக்களுக்கு சேவை செய்யவே அரசியல்வாதிகள். மக்கள் மாக்கள் அல்லர், இவ்வாறு மக்களை வெயிலில் அமரவைத்து வாட்டி வதைப்பதை போன்ற கூட்டம் மக்கள் சேவை இல்லை. சேவை என்ற பெயரில் நடத்தப்படும் நாடகமே!" என திமுக தலைவர் ஸ்டாலினின் கிராம சபை கூட்டத்தினை குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin grama sabha kootam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->