ஒரே இடத்தில் ஒன்று கூடும் எடப்பாடி மற்றும் ஸ்டாலின்.!! அரசியல் களம் சூடு பிடிக்க., அரங்கேற போகும் சம்பவம்!!
Stalin and edapadi speech in salem
வருகிற ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதை தமிழகத்தில் அதிமுக, திமுக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைத்து தேர்தல் வியூகம் வகுத்து வருகின்றது.
தற்பொழுது, ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்கள் பற்றி தகவல்கள் வெளியாகின்றன. இதனால், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தொடர்ந்து தொகுதிகளுக்கு சென்று வேட்பாளர்கள் நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நகர்விற்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி நாளை 22 ம் தேதி தனது சொந்த ஊரான சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். கள்ளக்குறிச்சி அருகே வாழப்பாடி கருமாந்துறையில் காலை 9 மணிக்கு விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்க உள்ளார்.
பின்னர், அங்கு அதிமுக கூட்டணியில் தேமுதிக சுதீஷ் போட்டியிட உள்ள நிலையில், அவருக்கு ஆதரவளித்து வாக்கு சேகரிக்க துவங்குகிறார். பின்னர் சேலம் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் முதல்வர் அங்கிருந்து தர்மபுரி செல்ல இருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து திமுக சார்பில், போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலத்தில் ஸ்டாலினும் அதே தேதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பின்னர் தருமபுரி மற்றும் அரூர் தொகுதிகளில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது சேலம் மாவட்ட தொண்டர்களுக்கு உற்ச்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது.
English Summary
Stalin and edapadi speech in salem