ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் ஸ்ரீரங்க நாராயணன் மரணம்.! இன்று உடல் நல்லடக்கம்.!!
ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் ஸ்ரீரங்க நாராயணன் மரணம்.! இன்று உடல் நல்லடக்கம்.!!
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஸ்ரீ ராமனுஜ மடத்தின் 50-வது ஜீயராக ஸ்ரீரங்க நாராயணன் என்பவர் இருந்து வந்தார். 89 வயது நிரம்பிய அவர், இருதய கோளாறு மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில், அவர் கோவிலின் மடத்திலேயே தங்கி அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும், இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 3 மணி அளவில், ஜீயர் ஸ்ரீரங்க நாராயணன் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், நேற்று மரணம் அடைந்த ஜீயர் ஸ்ரீரங்க நாராயணன் உடல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வடக்கு வாசலில் உள்ள மடத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் உடலை பக்தர்கள், பொதுமக்கள் வணங்கி, கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மறைந்த ஜீயர் ஸ்ரீரங்க நாராயணரின் உடல், இன்று காலை 11 மணிக்கு பல்லக்கின் மூலம், 4 ரத வீதிகளில் எடுத்து செல்லப்பட்டு. மாலை 3 மணிக்கு கொள்ளிடம் கரையில் உள்ள ஆளவந்தான் படித்துறை பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது. மேலும் இவரின் மரணம் அப்பகுதி மக்களையும் பக்தர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
srirangam temple jiyar sriranga narayanan passed away