பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்பவர்களுக்கு சிறப்பு சலுகை!! பக்தர்கள் மகிழ்ச்சி!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் நடக்கும் கிரிவலத்தை காண கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்கள் வந்து போவதற்காக தற்போது நாளையும், நாளை மறு நாளும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேபோல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பிலும் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாளையும், நாளை மறுதினம் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி:- 'வேலூரில் உள்ள கன்டோன்மென்ட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் நாளை இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு சென்றடையும்.

மேலும் இந்த ரெயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம், துரிஞ்சாபுரம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மீண்டும் திருவண்ணாமலையில் இருந்து 19-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 5.55 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை சென்று அடையும்' என்று திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special train from vellore to tiruvannamalai


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->