''அனைவருமே எனது சகோதரர்கள் தான்'' - செளமியா அன்புமணி பேட்டி.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று காலை 7.05 மணிக்கு திண்டிவனம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

பெண்களிடம் பா.ம.கவுக்கு அமோக வரவேற்பு உள்ளதால் எனது வெற்றி உறுதி. தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் அனைவரும் எனது சகோதரர்கள் தான். 

ஜனநாயக முறைப்படி நடைபெறும் இந்த தேர்தலில் ஜனநாயக முறைப்படி எனது வாக்கை பதிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியின் போது மயிலம் எம்.எல்.ஏ. ச. சிவக்குமார், பா.ம.க மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என பலரும் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sowmiya Anbumani interview


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->