தந்தையை வெட்டிக் கொலை செய்த கொடூரன்.! கேட்ட பணத்தை கொடுக்காததால் ஆத்திரம்.!!
தந்தையை வெட்டிக் கொலை செய்த கொடூரன்.! கேட்ட பணத்தை கொடுக்காததால் ஆத்திரம்.!!
வேலூர் மாவட்டம், பனப்பாக்கம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் மேலூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வனக்காவலர் மாசிலாமணி. இவருடைய மகன் சாந்தசீலன், இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சாந்தசீலன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள அவரது மாமியார் வீட்டில் தங்கியிருந்தார். ஓய்வுபெற்ற வனக்காவலர் மாசிலாமணி தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சாந்தசீலன் தனது தந்தை மாசிலாமணியிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மாசிலாமணி பணம் தர மறுத்ததால், சாந்தசீலன் தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் குடித்துவிட்டு போதையில் வந்த சாந்தசீலன் பணம் கேட்டுள்ளார், கொடுக்க மறுத்த தந்தையை அடித்து, உதைத்த மகன் தொடர்ந்து ஆத்திரம் அடங்காமல் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதனால், தலை மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்ததில் மாசிலாமணி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து, அங்கிருந்து தப்பி ஓடிய சாந்தசீலன் இன்று காலையில், நண்பர்களுக்கு போன் செய்து தந்தையை வெட்டிவிட்டேன். அவர் என்ன நிலையில் உள்ளார் என்று பார்க்க சொன்னார். நண்பர்கள் சென்று பார்த்த போது, மாசிலாமணி கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் திரண்டு போலீசில் புகார் அளித்த நிலையில், பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாசிலாமணியின் உடலை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தந்தையை கொன்று தப்பித்து ஓடிய சாந்தசீலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
son murder to father in vellore district