தாயை கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய மகன்! விசாரணையில் வெளிவந்த அதிரவைக்கும் உண்மைகள்! - Seithipunal
Seithipunal


சென்னை தேனாம்பேட்டையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் நடேசன். இவர் தனது முதல் மனைவியை விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் நடேசனின் முதல் மனைவி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.

மேலும் நடேசன் முதல் மனைவிக்கு விக்னேஷ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் பிரபல காபி உணவகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விக்னேஷ்வரன் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாய் படும் வேதனையை பார்க்க முடியாமல், அவரை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது  விக்னேஷ்வரன் தூக்கில் தொங்கியபடியும், அவரது தாய் சுந்தரவல்லி படுக்கையில் இறந்தும் கிடந்துள்ளார். 

     

மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விக்னேஷ்வரன் வேலை பார்க்கும் கடையின் மேற்பார்வையாளரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஒரு நல்ல காரியத்திற்கு தேவைப்படும் அப்பொழுது கொடுங்கள் என கூறி விக்னேஸ்வரன் ரூ. 6,500 பணத்தை எனக்கு கூகுள் ப்ளேவில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் தற்போதுதான் தங்களது இறுதிச் சடங்கிற்காக விக்னேஷ்வரன் அந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளார் என தெரிகிறது என கூறி வருத்தமடைந்துள்ளார்.

 இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

son killed mother and commits suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->