திருமணம் செய்துவைக்கவில்லை என தாயை அடித்து கொன்ற மகன்!
திருமணம் செய்துவைக்கவில்லை என தாயை அடித்து கொன்ற மகன்!
திருமணம் செய்து வைக்காததால் பெற்ற தாயை கடப்பாரையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குறும்பூர் புதுநகரை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரின் கணவன் இறந்த நிலையில் மகன் ராமஜெயத்துடன் வசித்து வந்த நிலையில், நேற்று மதியம் குறும்பூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மது போதையில் ராமஜெயம் வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டில் மகனுக்கு சமைத்து கொண்டு இருந்த தாய் மாரியம்மாளிடம், தனக்கு ஏன் திருமணம் செய்துவைக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மகன் ராமஜெயம், ஒருகட்டத்தில் தாய் இப்படி குடித்துவிட்டு தாயிடம் சண்டையிட்டால் யாருடா உனக்கு பொண்ணு தருவா என மாரியம்மாள் கேட்க, ராமஜெயம் ஆத்திரத்தில் அருகே இருந்த கடப்பாரையை எடுத்து தாய் மரியம்மாளை தலையில் அடித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.மாரியம்மாள் இறந்ததை அறிந்த ராமஜெயம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த குறும்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராமஜெயத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருமணம் செய்து வைக்காததால் பெற்ற தாயை கடப்பாரையால் அடித்து கொலை செய்த இந்த சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.