மகனால் கைதான தந்தை! பெற்றோர்களே கவனம்!
மகனால் கைதான தந்தை! பெற்றோர்களே கவனம்!
கடந்த சிலநாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி ''சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், அவர்களின் தந்தைக்கு 1 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டும்.'' என்று உத்தரவிட்டது.
அதற்க்கு தமிழக அரசும் அரசனை வெளியிட்டது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 16 வயது பள்ளி மாணவனின் தந்தை செல்வம் தற்போது கைது செய்யப்பட்டார்.
அந்த மாணவன் 11ம் வகுப்பு தான் படிக்கிறான், அவனிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்து, அவனால் விபத்து ஏற்பட்டு முத்துசாமி என்பவர் உயிரிழந்துள்ளார். எனவே பெற்றோர்களே உயர் நீதிமன்றம் சொல்லியும் கேக்காமல் சிறுவர்களிடம் இருசக்கர வாகனத்தை கொடுக்காதீர்கள். மீறியும் கொடுத்தல் சட்டம் தன் கடமையை செய்யும். கவனமாக இருங்கள். இல்லை ஒரு வருட சிறை தண்டனையும். அப்பாவியின் உயிரும் பலிக்கடாவாகும்.