வைகோவை வம்பிழுத்த கள் இயக்க போராளி செ.நல்லசாமி!! மூக்குடைபட்ட வைகோ!!  - Seithipunal
Seithipunal


மதிமுக கள்ளை ஆதரிக்காது எனவும் கல்லும் போதை பொருள் தான் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வைகோவிற்கு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துமாறு கருது ஒன்றை தெரிவித்துள்ளார். 

அவர் செய்தியாளர்களிடம்," வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரே ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைகோ,' மதிமுக கள்ளை ஆதரிக்காது எனவும் கல்லும் போதை பொருள் தான்' என்றும் கூறியுள்ளார். 

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டு நீடித்து வருகிறது. இந்த தடையை நீக்க கோரி கள் இயக்கம் 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறது. 

இதற்காக பல போராட்டங்களையும் நடத்தியுள்ளது. இந்த போராட்டங்கள் பலவற்றில் மதிமுகவும் பங்கேற்று உள்ளது. மேலும், வைகோ தனது அறிக்கையிலும் வலியுறுத்தி உள்ளார். 

இந்நிலையில், அவர் கள்ளும் போதை பொருள் தான் என கூறியுள்ளார். அவ்வாறு போதை பொருள் என அவர் நிரூபித்து விட்டால், அவரது கட்சியின் பலம் கூடும். மேலும், அந்த ஒரு தொகுதியும் அவருக்கு வெற்றி வாய்ப்பை உறுதி படுத்தும். 

எங்களது இயக்கத்தின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த அரிய வாய்ப்பை வைகோ பயன்படுத்தி கொள்ள வேண்டும்." என கூறியுள்ளார். இவ்வாறு வைகோவின் முந்தைய ஆதரவு போராட்டங்களையும், தற்போதைய எதிர்ப்பு மனநிலையையும் சுட்டிக்காட்டியதால் வைகோ அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

S.Nallasamy says about vaiko


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->