மாணவியின் புத்தகப் பையில் புகுந்த பாம்பு..! தலைதெறிக்க ஓடிய மாணவி..!! ஓசூரில் பரபரப்பு..!!! - Seithipunal
Seithipunal


ஓசூரில் பள்ளிக்கு சென்ற மாணவியின் புத்தக பையில் பாம்பு புகுந்ததால், அம்மாணவி தலைதெறிக்க ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவி புத்தகப் பையில் பாம்பு புகுந்தது தெரியாமல் அம்மாணவி பையயை திறந்த போது பாம்பு இருந்ததை பார்த்து கூச்சலிட, பாம்பை பார்த்த மற்ற மாணவ, மாணவிகளும் அலறி அடித்து வகுப்பை விட்டு தலைதெறிக்க ஓடினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகரின் காமராஜ் நகரை சேர்ந்த மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பாடவேளையில் தன்னுடைய புத்தகப் பையை மாணவி திறந்துள்ளார்.

அப்போது, அவரின் புத்தக பையில் இருந்து ஒரு குட்டி நல்லபாம்பு ஒன்று வெளியே எட்டி பார்ப்பதை கண்ட மாணவியும், அவருடன் படிக்கும் மற்ற மாணவ, மாணவிகளும் அலறியடித்தபடி வகுப்பறையிலிருந்து வெளியே ஓடினர். 

மாணவ மாணவிகள் ஓடுவதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள், அந்த மாணவியின் புத்தக பையை மைதானத்திற்கு எடுத்து சென்று போட, பையிலிருந்து பாம்பு வெளியேறியது. உடனடியாக அந்த பாம்பினை சுற்றி இருந்த ஆசிரியர்கள் அடித்து கொன்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake in the student book bag


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->