ஆவடி இரட்டைக் கொலை - வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!!
Shocking information in avadi double murder case
ஆவடியில் சித்த மருத்துவர் சிவன் நியாயம் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன் அடிப்படையில் மகேஷ் என்ற வட மாநில நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கை பற்றிய செல்போனை ஆராய்ந்ததில் போலீஸ்காரருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மகேஷின் செல்போனில் ஆபாச உரையாடல்கள் இருந்ததும் ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆவடி சித்த மருத்துவர் சிவன் நாயரிடம் மகேஷ் மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது அவரது மனைவியிடம் மகேஷ் தவறாக நடந்து கொண்டதால் இனி வீட்டுக்கு வர வேண்டாம் என மருத்துவர் எச்சரித்துள்ளது போலீசார் நடத்தி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனைக்கு மீறி மீண்டும் மருத்துவரின் மனைவியிடம் அத்துமீற முயன்றதால் ஏற்பட்ட தகராறில் இருவரையும் மகேஷ் கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
English Summary
Shocking information in avadi double murder case