கைக்குழந்தையுடன் சென்ற ஷேர் ஆட்டோ மேம்பாலத்திற்கு அடியில் கவிழ்ந்தது!. குழந்தை உள்பட 6 பேர் காயம்!. - Seithipunal
Seithipunal



தஞ்சாவூர் மாவட்டத்தில் மேரீஸ்கார்னர் பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு அடியில் ரெயில் நிலையத்திற்கு திரும்பும் இடத்தில் ஒரு ஷேர் ஆட்டோ நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. அந்த ஷேர் ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் திடீரென கவிழ்ந்தது.

ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததை பார்த்த அந்த பகுதியில் சென்றவர்கள் ஓடி வந்து அதில் இருந்தவர்களை காப்பாற்றினர். இதில் ஷேர் ஆட்டோவில் வந்த 3 பெண்கள், கைக்குழந்தை, மற்றும் 2 ஆண்கள் உள்பட 6 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்தவர்கள் ஷேர் ஆட்டோவை தூக்கி நிறுத்தினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து விபத்து தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைக்குழந்தையுடன் பயணித்த அந்த ஆட்டோ கவிழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அலறல் சத்தம் போட்டனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

share Auto suddenly collapsed and 6 others were injured.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->