மதுரையில் பல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் எஸ்ஐ.! கைது செய்யாமல் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார்.!! - Seithipunal
Seithipunal


நாடுமுழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வந்தாலும், தமிழகத்தில் எங்கோ ஒன்று என்ற சம்பவங்கள் தான் நடந்து வரும், ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் பள்ளி சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடந்து வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஆத்திகுளம் குறிஞ்சி நகரின் சுவாமி தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரவியம். இவருக்கு வயது 68.

இன்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 9 வயது சிறுமி ஒருவரிடம் 'திரவியம்' ஆபாச செய்கைகளை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இந்த விடயமாக கூறி உள்ளார். மேலும் இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீப்போல பரவவே, திரவியம் வீட்டை உடனே அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, திரவியத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த தல்லாகுளம் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர். பின் திரவியத்தை பொதுமக்களிடம் மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் கூறியதில், இந்த பகுதியில் இருக்கும் சிறுமிகளிடம் திரவியம் அடிக்கடி அத்துமீறி வருகிறார். என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sexually abused a school girl in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->