முக ஸ்டாலினால் செய்யமுடியாத, ஒன்றை செய்யமுடியுமா? என கேட்ட செல்லூர் ராஜு!!
sellur raju says about stalin
கூட்டுறவுத் துறை மற்றும் புதிய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24வது பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு," நாடாளுமன்ற தேர்தலுக்காக எந்த ஒரு கட்சியும் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அதிமுக ஜெட் வேகத்தில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்தது நம்ம அதிமுக அரசு தான். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் தனக்கு செல்வாக்கு கூடி இருப்பதாக கூறுகிறார். பிறகு கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் என்ன?
மக்களிடம் தனக்கு செல்வாக்கு கூடி இருப்பதாக கூறும் ஸ்டாலின் தேர்தலில் தனித்து நிற்க தயாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளதை மதிமுக, விசிக, காங்கிரஸ் கட்சி மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் திமுக தலைவர் என்ன பதிலளிப்பார் என்பது தெரியவில்லை.
English Summary
sellur raju says about stalin