சேலத்தில் நில நடுக்கம்! மேட்டூர் அணைக்கு பாதிப்பா.?
சேலத்தில் நில நடுக்கம்! மேட்டூர் அணைக்கு பாதிப்பா.?
சேலம் மாவட்டம் ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு 3.3 ரிக்ட்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. மிகவும் லேசாக ஏற்பட்டது, இந்த நில அதிர்வால் பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.
இதேபோல, தர்மபுரி மாவட்டத்தின் நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்போது நில அதிர்வு ஏற்படுவதாக அங்குள்ளவர்களில் சிலர் கூறியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3.3 ரிக்ட்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது, அது மேட்டூர் அணைக்கு பாதிப்பு ஏற்படுமா? பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
English Summary
selam in earth quake is people fearing