வாட் அப்-பில் வெளியான திண்டுக்கல் பள்ளி ஆசிரியர், மாணவரின் மசாஜ் வீடியோ.! உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவருக்கு, பள்ளி மாணவர் மசாஜ் செய்து விடும், வீடியோ காட்சி, வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத் தலங்களிலும், வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது எந்தப் பள்ளி ஆசிரியர்? என்பது குறித்து விசாரணை செய்ய, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தகுமார் உத்தரவிட்டார்.

அதன்படி, இது குறித்து, ஆய்வு நடைபெற்றது. அந்த ஆய்வி்ல், அது ஒட்டன்சத்திரத்திலிருந்து கரூர் செல்லும் வழியில் உள்ள இடையகோட்டை அரசு மேல் நிலைப்பள்ளி என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின் படி, நேற்று முன் தினம், பழனி, கல்வி மாவட்ட அலுவலர் கருப்பசாமி தலைமையிலான, கல்வி அதிகாரிகள், இடையகோட்டை அரசுப் பள்ளிக்குச் சென்றனர்.

வாட்ஸ் அப்பில் வெளியான ஆசிரியரும், அந்த மாணவரும் அந்தப் பள்ளியில் இருப்பதை உறுதி செய்தனர். அந்த வாட்ஸ் அப்பில் வந்தது போல, ஆசிரியர் வற்புறுத்திச் சொன்னதால், அவருக்கு மசாஜ் செய்ததாக, மாணவர் சொன்னார்.
    
அந்த ஆசிரியரிடமும் விசாரித்தனர். இருவரிடமும், எழுத்துப் பூர்வமாக, அவர்களது அறிக்கைகளைப் பெற்றனர்.

விரைவில், அந்த ஆசிரியர் மீது,  கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று கல்வி  அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school teacher whats up video issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->