நான்காம் வகுப்பு மாணவிக்கு அரசுப்பள்ளி ஆசிரியர் செய்த கொடுமை!. ஆசிரியர் கைது!. கடுப்பான பெற்றோர்கள்!. - Seithipunal
Seithipunal



கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இலப்பவிளை பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த காஜா முகமது என்பவரின் மகள் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜதுரை என்பவர் 4 ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை  கடந்த வெள்ளிக் கிழமைஅன்று  மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

                                                             
இதனை தொடர்ந்து அந்த மாணவி மாலை வீடு திரும்பியவுடன் பெற்றோரிடம் நடந்ததை பற்றி கூறியுள்ளார். அந்த சிறுமி கூறிய விஷயங்கள் பெற்றோர்களை வாரி தூக்கிப்போட வைத்தது.

நடந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று  உடனடியாக பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்து  பள்ளிக்கு விரைந்து வந்த பொலிசார் ஆசிரியரை கைது செய்து அழைத்துச்சென்றனர்.

தற்போதத்தைய காலகட்டத்தில் அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்கவே யோசிக்கும் பெற்றோர்கள் மத்தியில் அங்கு நடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school teacher forcing sex torture to Fourth grade student


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->